×

மதுரையில் கடையை உடைத்து உள்ளே புகுந்து ரூ.5 லட்சம் செல்போன்கள் கொள்ளை

மதுரை : மதுரையில் கடையை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர் விநாயகம். யானைக்கல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றார். நேற்று காலை அவரது கடை கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் விநாயகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்த போது, கடையின் ஷட்டர் மற்றும் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு, கடை முழுவதும் ரத்தம் சிந்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடை ஷோகேசில் இருந்த விலைமதிப்புள்ள 50 செல்போன்கள் கொள்ளை போனதும் தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த விளக்குத்தூண் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கடையை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் கூறுகையில், ‘‘கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கடையில் உள்ள கண்ணாடி கதவை உடைத்து உள்ளே செல்லும் போது கண்ணாடி உடலின் பல இடங்களில் கீறியுள்ளது. கொள்ளையடிக்க வந்தவரின் உடலில் ஏற்பட்ட கீறல்களால் ரத்தம் வெளியேறி இருக்கலாம். இதனால் தான் கடை முழுவதும் ரத்தம் சிந்தியிருக்க கூடும். சேகரிக்கப்பட்ட தடயங்கள் அடிப்படையில் விரைவில் ெகாள்ளையனை பிடித்து விடுவோம்’’ என்றனர்.

The post மதுரையில் கடையை உடைத்து உள்ளே புகுந்து ரூ.5 லட்சம் செல்போன்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Simmakal ,Yanyakal ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி